Mahanadhi Today Episode | 18.04.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் இடம் காவேரி பேசிக்கொண்டு இருந்தார். அந்த நேரம் தனக்கு ஒரு காதலன் இருப்பதாக கூறினார். அதை நிவின் நம்பவே இல்லை. ஆனால் காவேரி அது தான் உண்மை. எனக்கு காதலன் இருக்கிறான், மேலும் அவன் பெயர் வசந்த் என்று கூறினார். எங்களுக்குள் 6 வருடங்களாக பழக்கம் என்றும் கூறினார். இதனால் நிவின் மனம் உடைந்து போனார். கங்காவை பார்த்ததும் குமரனுக்கு பதட்டம் அதிகமாக ஆனது. அவர் அருகில் அமரும்போதே இவருக்கும் வேர்த்து கொட்டியது. பின் பாலை கீழே ஊற்றி அதை தொடைத்தார். பின் ஒரு முறை முட்டினால் கொம்பு முளைக்கும் என்று மீண்டும் கங்கா தலையில் முட்டினார். பின் கங்காவுக்கு சோர்வாக இருந்தால் தூங்குமாரு கூறினார். நிவின் இரவு வீட்டுக்கு தாமதமாக வருவதை பார்த்து ஜெயா கோவம் கொண்டார். மேலும் இனியும் அந்த காவேரி வீட்டுக்கு செல்ல கூடாது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author