மகாநதி தொடரில் இன்று, காவேரி பேசியதை நினைத்து நினைத்து நிவின் வருத்தத்தில் இருந்தார். அவரால் அதை விட்டு வேறு எதிலுமே அவரது கவனம் போகவில்லை. காவேரி நினைவில் வருந்தினார். அதே நேரம் அவரது அம்மா பசுபதி மாமாவின் மகள் பேசவேண்டும் என்று நிவின் இடம் ஃபோனை கொடுத்தார். ஆனால் நிவின் அவரிடம் பேச விரும்பவில்லை. இதை பார்த்த குமரன் ஒன்றும் புரியாமல் நின்றார். பின் குமரன் வீட்டுக்கு போகவே கூச்சப்பட்டார். வீட்டுக்கு போகவே பயமாக இருக்கிறது என்று புலம்பினார். உடனே அவரது கடையில் வேலை பார்க்கும் பையன் அவருக்கு ஒரு யோசனை கூறினார். கங்காவுக்கு மல்லிப்பூ மற்றும் அல்வா வாங்கி கொடுக்குமாறு கூறினார். அதையும் அவர் செய்தார். தேடி கண்டு பிடித்து கங்காவுக்கு பூ மற்றும் அல்வா வாங்கி சென்றார். அங்கு என்ன நடந்தது? காணொளியை பார்க்க…