Mahanadhi Today Episode | 27.04.2023 | Vijaytv

mahanadhi. 27.04.2023
மகாநதி தொடரில் இன்று, குமரன் அருகில் உள்ள கடைக்கு சென்று டீ வாங்க கிளம்பினார். அப்போது கங்கா குமரன் கடையில் தனியாக இருந்தார். அந்த நேரம் அங்கு வந்த சாந்தி கங்காவை பார்த்து கத்த ஆரம்பித்தாள். என் மகனை எதோ மாயம் செய்து தான் இப்படி மாற்றிவிட்டாள் என்று கூறினார். மேலும் உனக்கு தேவை, பணம், வசதி, நல்ல வசதியான மாப்பிள்ளை. ஆனால் இப்போது சந்தானம் இல்லை என்பதால் உன்னை கட்டிக்க யாரும் இல்லை என்பதால் தான் இப்படி என் மகனை கட்டிக்கொண்டாள் என்று கத்தினார். வீதியில் போகும் ஆட்கள் அனைவரும் இதை பார்த்தார்கள். குமரன் டீ வாங்கிக்கொண்டு வருவதற்குள் கங்கா வீட்டுக்கு கிளம்பினார். அங்கு சென்று காவெரியிடம் நடந்ததை சொல்லி வருந்தினார். காவேரியும் ஆறுதல் கூறினார். மேலும் பசுபதி தான் தனது அப்பாவை ஏமாற்றி இருக்கிறார் என்று கூறினார். கங்காவும் இதற்கு பின் எதோ சதி இருக்கிறது என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….