Mahanadhi Today Episode | 31.05.2023 | Vijaytv
mahanadhi. 31.05.2023
மகாநதி தொடரில் இன்று, காவேரி மற்றும் யமுனா இருவரும் நடந்ததை நினைத்து சிறிது சந்தோசம் அடைந்தார்கள். மேலும் யமுனா ராகவை அடித்தது தான் பெரிய விஷயம் என்று காவேரி பெருமையாக கூறினார். ஆனால் இதற்கு காரணம் நிவின் தான் என்று யமுனா கூறினார். அதற்காக நிவினுக்கு நன்றியும் அனுப்பினார் காவேரி. அதே நேரம் ஜெயா நிவின் நடவடிக்கை எதுவும் சரி இல்லை என்று கண்டித்தார். ஆனால் நிவின், ஒரு பொண்ணை கடத்தும் அளவுக்கு செல்லும் ராகவ், அவனை கண்டிக்காமல் வளர்க்கும் ஒரு அப்பா, இப்படி ஒரு குடும்பத்தில் பெண் எடுப்பதை பற்றி இனியும் என்னிடம் பேசாதே என்று கத்தினார் நிவின். அடுத்த நாள் பசுபதி சாரதா வீட்டுக்கு வந்தார். ஆனால் அந்த நேரம் சாரதா வீட்டில் இல்லை. காவேரி, குமரன் மற்றும் யமுனா மட்டுமே இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…