மகாநதி சீரியலில் இன்று கங்காவிடம் குமரன் காவேரி கொடைக்கானல் போன பின்பு தனக்கும் கொடைக்கானல் போக ஆசை வந்துவிட்டதாக கூறுகிறார். திருமணத்திற்குப் பிறகு நாமும் எங்கும் செல்லவில்லை அதனால் தேனியில் இதற்கு கொடைக்கானல் செல்லலாம் எனக் கூற, அதே சமயத்தில் குமரனின் தாய் எழுந்து நீ கொடைக்கானல் காரன் தான் உனக்கு ஏன் மீண்டும் கொடைக்கானல் செல்ல வேண்டும் என கிண்டல் செய்கிறார்.
இன்னொரு பக்கம் பசுபதி தன் மகனுக்கு தொலைபேசியில் அழைத்து நிவினை கடத்தும் வேலை சரியாக நடக்குமா என விசாரிக்கிறார். காவிரிக்கும் விஜய்க்கும் இறுதி நாட்கள் நெருங்குகிறது என கூறுகிறார். இது எதையும் அறியாமல் காவேரியும் விஜய்யும் மகிழ்ச்சியாக குடித்துவிட்டு விளையாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கின்றனர். பின்னர் காவேரி நிவினுடன் தனக்கு இருந்த காதலைப் பற்றி நினைவு கூறி நெகிழ்ச்சி அடைந்து அழுவதோடு எபிசோட் முடிவடைகிறது.