Mouna Ragam 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். மனோகர் அந்த இடத்தில் கூட உன் குரல் சரி அகவில்லை இந்த விபரீத பரிட்சை வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் சத்யா அதை கேட்கவில்லை. சத்யாவை பார்க்க கார்த்திக் வந்து இருந்தார். சத்யாவை சந்தித்து மீண்டும் இது வேண்டாம் என்று கூறினார். ஆனால் சத்யா உறுதியாக இருந்தார் பாடுவதில். அதனால் கார்த்திக் ஆசிர்வாதம் செய்துவிட்டு வந்து கூட்டத்தோடு அமர்ந்தார். சற்று நேரத்தில் காதம்பரி ருக்மணி மற்றும் சுருதி மூவரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். சத்யா தோத்து அசிங்க படுவதை பார்பதற்கு தான் வந்ததாக கார்த்திக் இடம் கூறினார்கள். மனோகர் இவர்களை பார்த்து கோபம் கொண்டார், எதற்காக குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள் என்று எரிச்சல் அடைந்தார். தருண் அவரை சமாதானம் செய்து வைத்தார்.சத்யா தன் குரலை சரி செய்ய மீண்டும் முயற்சித்தார். ஷீலா சத்யாவை பார்த்து மீண்டும் அவரின் தன்னம்பிக்கையை உடைத்தார்.அப்படி என்ன நடந்தது? ஷீலா என்ன கூறினார் சத்யாவிடம். காணொளியை பார்க்க…

About Author