Mouna Ragam 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.03.2022

Mouna Ragam 2. 02.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் ஸ்கூல் திறப்பு விழாவுக்கு வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். அது சம்பந்தமான வேலைகள் அனைத்தையும் மனோகர் தருண் இடம் விசாரித்தார். ஆனால் அது அனைத்தையும் தானே செய்து முடித்துவிட்டதாக வருண் கூறினார். இதனால் வீட்டில் கேலி கிண்டல் என மாறி மாறி பேசிக்கொண்டார்கள். சத்யாவை பார்த்து மனோகர் உன் திரமைக்கு இது ஒரு நல்ல ஆரம்பம். இது போல் ஒரு பாட்டு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்பது கஸ்தூரியின் ஆடை கனவு, அதனால் தான் கார்த்திக் udn சேர்ந்து அந்த பள்ளியை நடத்தினோம். ஆனால் அது சரியாக போகவில்லை. ஆனால் இப்போ நீயே ஆரம்பிப்பது எனக்கு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருப்பதாக கூறினார். பின் வீட்டில் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தார்கள். ஸ்ருதி மட்டும் சத்யாவின் அம்மாவை பற்றியே யோசித்தார். பின் ஷீலா விடம் சத்யா அம்மா பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவரும் மல்லிகா என்று கூறினார். அதை கேட்டதும் அதிர்ந்து போனார் ஸ்ருதி. உடனே அவர் புகைபடத்தை பார்க்க வேண்டும் என்று கூறினார். பின் சத்யா அறையில் தான் அவள் பிறந்தநாள் ஆல்பம் இருக்கும் என்று ஷீலா கூறினார். பின் வீட்டில் அனைவரும் வருண் வாங்கி தந்த டிரஸ்களை போட்டுகொண்டு விழாவுக்கு கிளம்பினார்கள். ஸ்ருதி மட்டும் தனக்கு தலை வலிப்பதாக கூறினார். ஒரு 15 நிமிஷம் கழித்து வருவதாக கூறினார். அனைவரும் கிளம்பியபின் சத்யா அறைக்கு சென்று தேட ஆரம்பித்தார். அவர் தேடியதில் கார்த்திக் உடன் சக்தி எடுத்த சின்ன வயது ஃபோட்டோ கிடைத்தது. அதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தார் ஸ்ருதி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author