Mouna Ragam 2 Today Episode | 02.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 02.05.2022

Mouna Ragam 2. 02.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அந்த குழந்தையுடன் மேலும் நெருக்கம் ஆனார். சாப்பாடு ஊட்டுவது பாட்டு பாடி தூங்க வைப்பது என்று இருந்தார். பின் அடுத்த நாள் அனுவை பாட்டு பள்ளிக்கு கிளப்பினார். ஆனால் அனு சத்யா அவருடன் வந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். சத்யா வர மறுத்தார். ஆனாலும் விடாமல் அடம் பிடித்து சத்யாவை அழைத்து சென்றார். பின் பாட்டு பள்ளியில் குழந்தையை விட்டு வரும்போது வருண் சத்யாவை பார்த்தார். ஆனால் பேசவில்லை. இதை கவனித்த ஸ்ருதி தன் பங்குக்கு சத்யா வருண் இல்லாமல் சந்தோசமாகதான் இருக்கிறாள் என்று மேலும் வெறுப்பு வரும்படி பேசினார். அதை கேட்டு வருண் பேசலாம் என்று நினைத்ததும் வேண்டாம் என்று முடிவு எடுத்தார். ருக்மணி சத்யாவை பிரச்சனையில் மாட்ட வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அனுவை கடத்த வேண்டும் என்று ரௌடி ஒருவரை பார்த்து பணம் கொடுத்தார். சத்யா புகைபடத்தை அனுப்பி இவளுடன் வரும் குழந்தையை கடத்த வேண்டும் என்று பேசி முடித்தார். அவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author