Mouna Ragam 2 Today Episode | 02.06.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி கார்த்திக் கிருஷ்ணாவுக்கு எதிராக கொடுத்த பேட்டி டிவியில் வந்தது. மேலும் கார்த்திக்கிடமும் இதை பற்றி பெட்டி எடுத்தார்கள். அதில் கார்த்திக் உண்மையை போட்டு உடைத்தார். தனக்கு இரண்டு மனைவி இருப்பது உண்மை தான் ஆனால் தன் முதல் மனைவி மல்லிகா எனவும், சக்தி தான் தன் முதல் மகள் எனவும் கூறினார். மேலும் இப்போது அவர்களை தேடி தான் தாண்டிக்குடிக்கு செல்வதாகவும் கூறினார். இதனால் ஊரில் தெரிந்தவர்கள் அனைவரும் காதம்பரிக்கு, ஸ்ருதிக்கு, ருக்மணிக்கு என மாற்றி மாற்றி அழைப்புகள் வர ஆரம்பித்தது. ஸ்ருதி மனோகர் வீட்டில் கார்த்திக் சொல்வது அனைத்துமே பொய் என்று கதை சித்தரித்து கூறினார். அதையும் மனோகர் ஷீலா அனைவரும் நம்பினார்கள். அதே நேரம் கார்த்திக் டிவியில் பேசுவதை பார்த்த பழனி, மல்லிகாவும் ஸ்கதியும் தாண்டிக்குடியில் தான் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. உடனே அங்கு கிளம்ப ஆரம்பித்தார். வருண் அவர்களை அவரது காரில் அழைத்து சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author