Mouna Ragam 2 Today Episode | 04.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 04.04.2022

Mouna Ragam 2. 04.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வீட்டை பார்த்து பிரம்பித்து போய் பார்த்தார்கள் அவரது ஊர்காரர்கள். சத்யா இனியாவது ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். ஷீலா அந்த வழியாக சென்றார். அங்கு தரையில் அமர்ந்து சாப்பிடுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார். வேண்டா வெறுப்பாக பார்த்து பேசினார். பின் தோட்டத்தில் துணி காய போடுவதை பார்த்து மேலும் எரிச்சல் அடைந்தார். அதை பார்த்து சத்யா மீது கோவம் கொண்டார். பின் வீட்டில் டிவி பார்க்கும் குழந்தைகளை திட்டினார். பின் அவர்களை வருண் சமாதானம் செய்தார். அடுத்த நாள் வருண் அனைவரையும் கடற்கரைக்கு அழைத்து சென்றார். அங்கு மல்லிகா வருண் இடம் சத்யா இதை வரை பட்ட கஷ்டங்களை மறந்து இப்போது தான் ஒரு சந்தோசமான வாழ்க்கையை ஆர்மபித்து இருக்கிறாள் என்று கூறினார். பின் அடுத்த நாள் ஊருக்கு கிளம்பினார்கள். மல்லிகா ஸ்ருதிக்கு தெரிந்த உண்மையால் சத்யா வாழ்க்கையில் பிரச்சனை வருமோ என்று பயந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author