Mouna Ragam 2 Today Episode | 04.11.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்து விசாரித்தார்கள். யார் மேல் சந்தேகம் உள்ளது, கடைசியாக யார் அவரை பார்த்தது என்று விசாரித்தார்கள். மேலும் அவர்தான் அந்த கடிதத்தை எழுதியது என்றும் உறுதி செய்தார்கள். மேலும் இது கண்டிப்பாக கடத்தலாக தான் இருக்கும் என்றும், அதற்கு காதம்பரி, ருக்மணி மற்றும் விஸ்வநாதன் தான் காரணம் என்றும் கூறினார்கள். ஸ்ருதி இங்கு நடப்பதை எல்லாம் பார்த்து கண்டிப்பாக இது தன் தாத்தா வேலையாக தான் இருக்கும் என்றும் நினைத்தார். அதை அவருக்கு அழைத்து பேசி உறுதியும் செய்தார். ஸ்ருதி பேசுவதை கேட்ட சொர்ணம் கண்டிப்பாக இவர்கள் தான் இந்த கடத்தலுக்கு காரணம் என்று தெரிந்து கொண்டார். வருணுக்கு அதை சொல்லி எச்சரித்தார். இதனால் வருண் மற்றும் சக்தி உடனே விஸ்வநாதன் வீட்டுக்கு கிளம்பினார்கள். அங்கு சென்று விஸ்வநாதன் இடம் பேசினால், அவர் திமிறாகவே பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author