Mouna Ragam 2 Today Episode | 05.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.04.2022

Mouna Ragam 2. 05.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஊருக்கு கிளம்பும் முன் ஸ்ருதியை பார்த்து பேசினார். சத்யா வாழ்கையை கெடுத்து விட வேண்டாம் என்று கூறினார். அவருக்கு தெரிந்த உண்மை வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஸ்ருதி அதெல்லாம் சொல்ல மாட்டேன் என்று நக்கலாக கூறினார். மல்லிகா அழுதுகொண்டே வெளியே போவதை பார்த்த தருண், ஸ்ருதி தான் எதோ சொல்லி அவர்களை கஷ்டபடுத்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார். உடனே ஸ்ருதியிடம் அது பற்றி கேட்டார். ஆனால் ஸ்ருதி அதை தவறாக பேசினார். உன் முன்னாள் காதலியின் அம்மா என்பதால் பதருகிராயா என்று குத்தலாக பேசினார். அதை கேட்ட தருண் கோவத்தில் ஸ்ருதியை அடிக்க கை ஒங்கினர். அது நடந்தது முடிந்த விஷயம், சத்யா என்னை விரும்பவில்லை அவருக்கு திருமணம் முடிந்து வருண் இடம் சந்தோசமாக இருக்கிறார். அவரை போய் என்னோடு சேர்த்து வைத்து பேச வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் மீண்டும் ஸ்ருதி அதே போல் பேசியதால், இனி உன் பேச்சுக்கு நான் பயப்படபோவது இல்லை என்றார். நானே வருண் இடம் நடந்ததை கூற போவதாக கூறினார். பின் வருணை தனியாக அழைத்து பேசினார் தருண். முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினார். மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த உண்மையை சொல்ல முடியாமல் தவித்தார். அதற்குள் ஊருக்கு மல்லிகா கிளம்பியதால் பேச முடியாமல் போனது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author