Mouna Ragam 2 Today Episode | 07.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.07.02.2022

Mouna Ragam 2.07.02.2022

மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் திருமணம் நல்லபடியாக முடிந்தது. காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் கண் கலங்கினார்கள். ஸ்ருதி தனக்கு திருமணம் முடிந்து விட்டது என்று சந்தோசத்தில் இருந்தார். பின் நல்ல நேரம் முடிவதற்குள் வீட்டுக்கு அழைத்து செல்கிறோம் என்று ஷீலா கூறினார். சத்யா ஷீலா இருவரும் ஸ்ருதியை அழைத்து வந்தார்கள். காதம்பரி வீட்டிற்கு வந்ததும் கார்த்திக்கை பார்த்து நடந்ததை கூறினார். கார்த்திக் அங்கு நடந்ததை விசாரித்தார். திருமணம் எந்த குறையும் இல்லாமால் முடிந்ததா என்று கேட்டார்? அதற்கு காதம்பரி எந்த குறையும் இல்லை, ஆனால் கார்த்திக் இல்லாதது மட்டும் தான் பெரிய குறை என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதை பரவாயில்லை, தனக்கு ஸ்ருதி சந்தோசம் தான் முக்கியம் என்று கூறினார். காதம்பரியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸ்ருதி திருமணத்தை இவளோ பெரிய திருவிழாவை போல் நடத்த கனவு கண்டோம் ஆனால் இப்படி யாருக்கும் தெரியாமல் நடக்கும்படி ஆகிவிட்டதே என்று புலம்பினார். ஆனால் கார்த்திக் அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். காதாம்பரி உடனே ஸ்ருதி அறைக்கு சென்று அவர் நினைவுகளை நினைத்து பார்த்தார். ஸ்ருதி தருண் இருவரையும் வருண் மற்றும் சத்யா வீட்டிற்க்கு அழைத்து சென்றார்கள். காரில் வரும்போது தருண் கோபத்தில் இருந்தார். அதனால் யாரிடமும் பேசாமல் அமைதியாக வந்தார். ஆனால் வருண் எப்போதும் போல் அவரை கேலி கிண்டல் செய்வது என்று பேசிக்கொண்டு வந்தார். வீட்டிற்கு வந்ததும் ஆரத்தி எடுக்க வேண்டும் என்று ஷீலா கூறினார். சத்யாவும் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். வருண் கர்ப்பூரம் ஏற்றி ஆர்த்தி எடுத்து அழைத்து வாருங்கள், நாள் என் அறையில் இருந்துகொள்கிறேன் என்று கூறினார். பின் மணமக்களுக்கு பால் பழம் அனைத்தும் ஏற்பாடுகள் செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author