Mouna Ragam 2 Today Episode | 07.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 07.07.2022

Mouna Ragam 2. 07.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, பழனி நாளை நடக்க போகும் போட்டியை நினைத்து கலங்கினார். வருண் படி எப்படியாவது சக்தியை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்பினார். அதை அவரது மனைவியிடம் கூறினார். மேலும் வருண் மிகவும் நல்ல பையன், சக்தியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார் என்று நம்பினார். இருந்தாலும் ஒரு சின்ன பயத்தில் தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று சக்தியை அழைத்து செல்ல சொன்னேன் என்றார். அதைப்கெட்டதும் சொர்ணத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த நாள் காலையில் பாட்டு போட்டிக்கு அனைவரும் தயார் ஆனார்கள். சத்யா எப்படியாவது வருண் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். வருணுக்கு நேரம் நெருங்க நெருங்க பதட்டம் அதிகரித்தது. யாராவது தன் கூடவே இருந்து ஊக்கப்படுத்தினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று ஏங்கினார். அந்த நேரம் மனோகர், தருண், ஸ்ருதி, ஷீலா அனைவரும் வந்து இருந்தார்கள். அவர்களை பார்த்ததும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார் வருண். சத்யாவை ஸ்ருதி தனியாக பார்த்து நக்கலாக பேசினார். வருண் பாட வேண்டும் என்று விட்டுக்கொடுத்து உடனே சென்னைக்கு வர திட்டமா என்று கிண்டல் பேச்சு பேசினார். ஆனால் சத்யா நான விட்டுக்கொடுக்காமல் அவர் வெற்றி பெற்று என்னை ஊருக்கு அழைத்துச் செல்வார் என்றார். மேலும் எங்களிடம் சென்னையில் நீ சந்தோசமாக இருக்க முடியாது என்றும் மிரட்டலாக பேசினார். ஆனால் சத்யா தானும் வருணும் சேர்ந்து சந்தோசமாக வாழ தான் போகிறோம் என்று நம்பிக்கையாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author