Mouna Ragam 2 Today Episode | 07.11.2022 | Vijaytv
Mouna Ragam 2. 07.11.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் விஸ்வநாதன் தான் மல்லிகா கடத்தலுக்கு காரணம் என்று தெரிந்த உடன் அதை உடனே கார்த்திக் வீட்டுக்கு சென்று குடும்பத்தில் அனைவரிடமும் கூறினார்கள். இதை கேட்ட கார்த்திக் ஆத்திரத்தில் கொந்தளித்தார். இனியும் அவரை விட்டு வைக்க மாட்டேன், என் மல்லிகாவை திரும்ப கூட்டி வருவேன் என்று கிளம்பினார். ஆனால் சக்தி வேண்டாம் என்று தடுத்தார். இந்த முறை தானும் தன் கணவர் வருணும் சேர்ந்து தான் இதை சரி செய்வோம் என்று உறுதியாக கூறினார்கள். ஸ்ருதி இங்கு கார்த்திக் கவீட்டில் இருக்கும் வரை அவருக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்துவிட்டு நேராக அவரது தாத்தா வீட்டுக்கு கிளம்பினார். அங்கு சென்று மல்லிகாவை கடத்திவிட்டோம் என்ற திமிரில் அனைவரும் அமர்ந்து இனிப்பு சாப்பிட்டு கொண்டாடினார்கள். சக்தி கதறுவதை பார்க்கவே சந்தோசமாக இருப்பதாக பேசினார்கள். ஸ்ருதி எப்படி இந்த கடத்தலை செய்தார் என்று தன் தாத்தாவிடம் விசாரித்தார். அப்போது அவரது தாத்தாவும் எப்படி மல்லிகாவை கடத்தினார், எப்படி இந்த திட்டத்தை போட்டார் என்று வரிசையாக கூறினார். இதை ஷீலா மாடியில் இருந்து கேட்டு விட்டார். தன்னிடம் இவர்கள் மறைப்பதால் மேலும் கோவம் கொண்டார். ஆனால் மல்லிகா இங்கு உள்ளார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று ருக்மணி வாயை கிளரினார். ருக்மணியும் ஷீலாவின் திட்டப்படி மல்லிகாவை இங்கு அடைத்து வைத்து உள்ளார்கள் என்று உளரிக்கொட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.