Mouna Ragam 2 Today Episode | 09.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 09.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் இடிந்து போய் இருந்தார்கள். தருண் இடம் ஷீலா மனோகர் என மாறி மாறி கேள்விகள் கேட்டார்கள். எதற்காக இப்படி செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். ஸ்ருதிக்கு ஒரு ஸ்கூல் வேண்டும் என்றால் அதை எங்களிடம் சொல்லி இருக்கலாம். அவளுக்கும் ஒரு ஸ்கூலை திறந்திருக்கலாம். ஆனால் நீ செய்தது பெரிய நம்பிக்கை த்ரோகம் என்று மனோகர் திட்டினார். நான் என் பிள்ளைகளை ஒழுங்காக தானே வளர்த்தேன் என்று பொங்கினார். ஆனால் தருண் எதற்குமே வாயை திறக்கவில்லை. வருண் சத்யாவுக்காக ஒரு ஒரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தான் , அதை அத்தனையும் நீ கூடவே இருந்து பார்த்து விட்டு இப்படி ஒரு துரோகம் எப்படி செய்ய மனசு வந்தது என்று மனோகர் கோவமாக கிளம்பினார். அதே போல் வருண் இடம் பேச தருண் முயற்சித்தார். அப்போது அவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் கிளம்பினார். இது அத்தைக்கும் காரணம் ஸ்ருதி தான் என்று அவர் கடைசி வரை சொல்லவே இல்லை. இதனால் அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…