Mouna Ragam 2 Today Episode | 10.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 10.05.2022

Mouna Ragam 2. 10.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவுக்கு ருக்மணி தான் குழந்தையை கடத்த முயன்றார் என்று தெரிந்ததும் கோவத்தில் அவரை எச்சரிக்க நேரில் வந்தார். சத்யா வீட்டுக்குள் நிற்பதை பார்த்த ருக்மணி, அவரை இன்னும் போலீஸ் கைது செய்யவில்லையா என்று கேட்டார். மேலும் குழந்தையை சத்யா தான் கடத்தினார் என்று கூறினார். சத்யா இதை கேட்டு கோவத்தில் பாங்கினார். நான் உங்கள் வாழ்கையில் நான் எங்குமே பிரச்சனை செய்ததில்லை, பின் எதற்காக என்னை தாக்க வேண்டுமென்று கேட்டார். எதற்காக மீண்டும் மீண்டும் என்னை என் வாழ்கையை வாழ விடாமல் செய்ய வேண்டும் என்று கேட்டார். மேலும் இது போன்ற வேலை செய்தால் இனியும் பொறுமையாக இருக்க மாட்டேன் என்றார் சத்யா. சத்யா பேசுவதை பார்த்த கார்த்திக் காதம்பரி ருகமணி மற்றும் பாட்டி அனைவருமே அதிர்ச்சியில் நின்றார்கள். பதிலை எதிர் பார்க்காமல் சத்யா கிளம்பினார். அதே நேரம் மனோகர் வீட்டுக்கு DCP வந்து இருந்தார். அப்போது சத்யா என் வீட்டில் 3 நாளாக தான் இருக்கிறாள், ஆனால் என் குடும்பத்தில் ஒருத்தியாகவே மாறிவிட்டாள். அவள் பேசியதில் உங்கள் குடும்பத்தை பற்றி தான் அதிகமாக பேசினாள் என்று கூறினார். மேலும் வருணிடம் தனியாகவும் பேசினார். சத்யாவால் இந்த குடும்பத்தை விட்டோ அல்லது வருண் இல்லாமலோ அவரால் இருக்க முடியாது என்று கூறினார். மேலும் இந்த கடத்தல் கார்த்திக் கிருஷ்ணாவின் மாமியார் ருக்மணி தான் செய்தார் என்று கூறினார். இதனால் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மனோகர் ஸ்ருதி மீது கோவம் கொண்டார். ஸ்ருதி தனக்கு இது எதுவுமே தெரியாதது போல் பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author