Mouna Ragam 2 Today Episode | 10.06.2022 | Vijaytv
Mouna Ragam 2. 10.06.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் அப்பா வற்புறுத்தி கூப்பிட்டாலும் சத்யா வராமல் வர மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி அனுப்பினார். பின் சுகுமார் வீட்டிலும் வருண் தங்குவது பிடிக்காமல் இருந்தது. இதனால் வருண் இடம் நேரடியாகவே சுகுமரின் மனைவி கூறினார். மல்லிகாவை எனக்கு 15 வருடங்களுக்கு மேல் தெரியும். உங்களை இங்கு வைத்து அவளுடன் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லை என்றார். இதனால் வருண் வேறு வழி இல்லாமல் அங்கு இருந்து கிளம்பினார். மேலும் எங்கு போவது என்று தெரியாமல் முழித்தார். ஆனால் அவரது வண்டியை பார்த்த உடன் அதிலே தங்கி விடலாம் என்று நினைத்தார். பின் சத்யாவிடம் பேச வேண்டும் என்று முயற்சி செய்தார். சத்யா வீட்டையே சுற்றி சுற்றி வந்தார். ஆனால் சத்யாவின் மாமா அவரை நெருங்க விடவில்லை. மேலும் பழனி மல்லிகாவிடம் சக்திக்கு விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…