Mouna Ragam 2 Today Episode | 10.10.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி மற்றும் அவரது அம்மா வீட்டில் திட்டம் போட்ட படியே நாடகத்தை நடத்தினார்கள். ஸ்ருதிக்கு கரு களைந்துவிட்டது என்று தருணை நம்ப வைத்தார்கள். தருண் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சக்தி தான் இதை செய்தாள், அவளின் பொறாமை குணத்தால் தன் இது போன்ற விஷயங்களை செய்து இருக்கிறாள் என்று கூறினார்கள். பின் ஸ்ருதியும் தன் குழந்தையை இழந்து விட்டோம் என்று நாடகத்தை நடத்தினார். பின் வீட்டுக்கு வந்ததும் ருக்மணி மற்றும் காதம்பரி இருவரும் அக்தி தன் இதற்கு காரணம் என்று கூறினார்கள். அதற்கு வருண் மறுத்தாலும் அதை கண்டிப்பாக இல்லை இவள் தான் செய்து இருப்பாள் என்று கூறினார்கள். மேலும் தருண் தனியாக இருக்கும்போது விஸ்வநாதன் சக்தி தன் வேண்டும் என்றே இந்த வேலையை செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். தருண் அதை நம்பாமல் இருந்ததால் அவர் எடுத்த வீடியோவை ஆதாரமாக காட்டி தருண் மனதை மாற்றினார். சக்தி என்னதான் சொன்னாலும் அதை பொய் என்றே கூறினார்கள் ஸ்ருதி குடும்பத்தில் உள்ளவர்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author