Mouna Ragam 2 Today Episode | 11.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.04.2022

Mouna Ragam 2. 11.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் வாழ்க்கை வீணாகி விட்டதோ என்று மல்லிகா வருந்தினார். சத்யாவை இந்த வீட்டில் விட்டு செல்ல அவருக்கு மனசே இல்லை. மீண்டும் மீண்டும் சத்யாவை தன்னுடன் அழைத்து செல்லவே நினைத்தார். ஆனால் சத்யா தனக்கு இந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அதனால் வேறு வழி இல்லாமல் மல்லிகாவும் சத்யாவை கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி கிளம்பினார். மனோகர் இடமும் தன் மகளை பர்துகொள்ளும்படி கூறிவிட்டு கிளம்பினார். அவர்கள் போன பின் சத்யா வருத்தமாக இருந்தார். அடுத்த நாள் காலையில் வருண் கண் முளிப்பதற்காக காத்திருந்தார். ஆனால் வருண் கண் விழித்ததும் சத்யாவை கண்டுகொள்ளாமல் இருந்தார். சத்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் வருணுக்கு உடம்பு சரி இல்லாத தால் அப்படி இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டார். பிறகு மனோகர் ஷீலாவிடம் எப்படி வருண் அறையில் மெழுகு வைத்தது என்று கேட்டார். அதற்கு சுந்தரி தான் வருண் அங்கு இருப்பது தெரியாமல் அங்கு வைத்து விட்டதாக கூறினார். இதனால் கோவதின் உச்சத்தில் கத்தினார் மனோகர். இனி உனக்கு இங்கு வேலை இல்லை என்று கூறினார். இதனால் சுந்தரி அழத்தொடங்கினார். தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு மனோகர் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author