Mouna Ragam 2 Today Episode | 12.05.2022 | Vijaytv

Mouna Ragam 2.12.05.2022

Mouna Ragam 2.12.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தான் வாழ்ந்த வருண் அறையில் ஒரு முறை பார்த்து வருவதாக கூறி மேலே சென்றார். சத்யா அவரது அறையை பார்த்த பின் அவர்கள் சேர்ந்து பேசியது, பழகியது, காதல் செய்தது என்று அனைத்துமே நினைவில் வந்து போனது. பின் வருணுக்கு ஓர் கடிதம் எழுதி வைத்து விட்டு கிளம்பினார். மனோகர் சத்யா வீட்டை விட்டு செல்வதில் விருப்பம் இல்லை என்றாலும் சத்யாவின் முடிவுக்கு மதிப்பு கொடுக்க நினைத்து அவரும் சம்மதித்தார். மேலும் சத்யா தனக்கு ஒரு அப்பாவாக மனோகர் இருந்ததாக கூறி கிளம்பினார். சத்யா சென்ற கொஞ்ச நேரத்தில் வருண் வீட்டுக்கு வந்தார். வந்ததும் மனோகர் அவரை அழைத்து பேசினார். தான் சத்யாவை பார்க்கதான் சென்றேன் என்றார். ஆனால் சத்யா இங்கு தான் இருந்தார் என்று ஷீலா கூறினார். மேலும் அவள் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டார் என்று கூறினார் மனோகர். வருண் செய்த தவறை சுட்டி காட்டினார் மனோகர். எப்படி இது போல் சத்யாவை உன்னால் நினைக்க முடியும் என்று கோவம் கொண்டார். பின் வருண் அவர் அறைக்கு வந்ததும் சத்யா எழுதி வைத்த கடிதத்தை எடுத்து படித்தார். அதில் சத்யா தன்னையும் தன் வீட்டையும் எப்படி உயர்வாக நினைத்து இருந்தார் என்பதை புரிந்து கொண்டார் வருண். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author