Mouna Ragam 2 Today Episode | 13.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.05.2022

Mouna Ragam 2. 13.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் அம்மா ஊருக்கே செல்லலாம் என்று நினைத்து நடக்க ஆரம்பித்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்தினார் கார்த்திக் கிருஷ்ணா. சத்யாவை அவரது புகுந்த வீட்டுக்கு செல்லுமாறு கூறினார். ஆனால் சத்யா அதற்கு மறுப்பு கூறினார். மேலும் அந்த வீட்டில் என்னால் இனி ஒவ்வொரு முறையும் என்னை நிரூபித்து இருக்க முடியாது என்று கூறினார். கார்த்திக் அதற்கு, தானே நீ எனது மகள் என்று இந்த ஊர் அறிய சொல்கிறேன் என்றார். ஆனால் அப்போது ஸ்ருதி அங்கு வந்தார். வந்ததும் சத்யா உங்கள் மகள் என்று வெளியே தெரிந்தால் அது எனக்கும் என் அம்மாவுக்கும் தான் அவமானம் என்றார். மேலும் இந்த விஷயம் யாருக்கும் தெரியவே கூடாது என்று மிரட்டலாக பேசிச்சென்றார். அதை பார்த்த சத்யா கார்த்திக் கையை இதை விட்டு கிளம்பினார். கார்த்திக் என்ன செய்வது என்றே தெரியாமல் நின்றார். வருண் வீட்டில் சத்யா எழுதி வைத்த கடிதத்தை படித்தவுடன் அவரை வீட்டுக்கு அழைத்து வர கிளம்பினார். அவர் பின்னாடியே தருண் மனோகர் ஷீலா மூவரும் கிளம்பினார்கள். சத்யாவை வருண் பார்த்து மன்னிப்பும் கேட்டார். மேலும் தன்னுடன் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இனி இது போல எந்த நிலையிலும் சந்தேகமோ கோவமா பட மாட்டேன் என்றார். அதற்கு சத்யா என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author