Mouna Ragam 2 Today Episode | 14.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 14.03.2022

Mouna Ragam 2. 14.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இருவரும் கார்த்திக் வீட்டில் இருந்தார்கள். ஸ்ருதி அவரது அம்மா பாட்டியிடம் பேசி தன் நேரத்தை கழித்தார். எப்படி சத்யா பேரில் திறந்த ஸ்கூலை உன் பெயருக்கு மாற்றினாய் என்று விசாரித்தார்கள். ஆனால் ஸ்ருதி இனி எல்லாமே நம் இஷ்ட படி தன் நடக்கும். எதுவுமே தருண் தன் பேச்சை மட்டும் தான் கேட்பார் என்று பெருமையாக கூறினார். இதை கேட்டதும் காதம்பரி மற்றும் ருக்மணி இருவருக்கும் சந்தோசம் தாங்க முடியவில்லை. கார்த்திக் இடம் தருண் பேசினார். தருண் தன் வீட்டை நினைத்து வருந்தினார். தன் அப்பா அண்ணன் என்று யாரிடமும் முகம் கொடுத்து பேச முடியாதவாரு செய்துவிட்டாள் ஸ்ருதி என்று புலம்பினார். கார்த்திக் தன்னால் முடிந்த வரை அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார். அதே சமயம் மனோகர் வீட்டில் அனைவரும் சாப்பிட்டார்கள். ஆனால் தருண் இல்லையே என கேட்டார். ஷீலா, அவர்கள் ஸ்ருதி வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறினார். தருண் நடவடிக்கை எதுவுமே புரியவில்லை, சரியும் இல்லை என்று கூறினார். திருமணத்திற்கு பிறகு எப்படி இவளோ பெரிய மாற்றம்? அவன் எதையுமே என்னிடம் மறைக்க மாட்டான் ஆனால் இப்போது எல்லாமே தானே மறைத்து மறைத்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறான் என்று புலம்பினார். ஆனால் சத்யா தருண் ஸ்ருதி இருவரையும் விட்டு கொடுக்காமல் பேசினார். வருண் மீண்டும் சத்யாவுக்கு ஏற்பாடு செய்த எதுவும் நடக்கவில்லையே என்று வருத்தத்தில் இருந்தார். ஆனால் அவரை சத்யா சமாதானம் செய்தார். அவர் தனக்காக அன்போடு செய்த ஒவ்வொரு விஷயமும் எனக்கு பெரிய விஷயம், அதற்கு முன் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று கூறினார். அதற்கு வருண் என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author