Mouna Ragam 2 Today Episode | 15.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.03.2022

Mouna Ragam 2. 15.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் ஸ்ருதி இருவரும் கார்த்திக் வீட்டில் இருந்து வீடு திரும்பினார்கள். அவர்களுக்கு சத்யா தான் கதவை திறந்துவிட்டார். அந்த நேரம் தருண் சத்யாவிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார். அந்த ஸ்கூல் விஷயத்தில் செய்த தவறுக்கு வருந்தினார். ஆனால் சத்யா அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார். இதை பார்த்த ஸ்ருதி தருணை பேச விடாமல் அவர்கள் அறைக்கு கூட்டி சென்றார். சத்யாவிடம் இனி அவர் பேச கூடாது என்று கத்தினார். அடுத்த நாள் காலையில் ஸ்கூலுக்கு கிளம்பினார் ஸ்ருதி. காலை உணவு இட்லி என்று சத்யா சொன்ன உடன் அவருக்கு அது வேண்டாம் என்றார். அது வேண்டும் இது வேண்டும் என்று வரிசையாக கேட்டார். ஆனால் சத்யா அதை எல்லாம் கேட்டு அந்த மாதிரி சமையல் தெரியாதது போல் நின்றார். இதனால் தான் வெளியே சாப்பிடுவதாக கூறினார் ஸ்ருதி. ஆனால் மதிய உணவு கட்டி தருமாறு கேட்டார். ஆனால் சத்யா மதியம் நான் இன்னும் சமைக்கவில்லை என்று கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதி அதிகாரமாக பேசினார். இந்த வீட்டில் உனக்கு இருக்கும் ஒரே வேலை சேமிப்பது தான் அதை கூட உன்னால் செய்ய முடியாதா என்று திமிராக கேட்டார். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த வருண் கோவத்தில் கொந்தளித்தார். ஸ்ருதியை கடிந்துகொண்டார். சத்யா ஒன்னும் இதன் வீட்டு வேலைக்காரி இல்லை, அவள் என் மனைவி அவளிடம் எதற்காக இந்த வேலையை செய்ய சொல்கிறாய். உனக்கு வேண்டும் என்றால் நீயே சாப்பாடு கட்டி எடுத்து போ. இல்லை என்றால் சுந்தரி அக்காவிடம் கேளு என்று கூறினார். மேலும் இந்த அதிகாரம் செய்யும் வேலை இனி வேண்டாம் என்றும் கூறினார். ஆனாலும் ஸ்ருதி தான் எந்துவும் தவறாக பேசவில்லை என்று கூறினார். உடனே வருண் தருண் இடம் ஸ்ருதியை இனி ஒழுங்காக நடந்தது கொள்ளும்படி கூற சொன்னார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author