Mouna Ragam 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.04.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வருண் பேசுவதை கேட்டு வருத்தமாக இருந்தார். என்ன தவறு செய்தோம் என்று ஒன்றும் புரியாமல் நின்றார். அப்போது ஸ்ருதி சத்யாவுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் உள்ளுக்குள் சத்யா அழுவதை பார்த்து ரசித்தார். சத்யாவும் அதை நம்பினார். ஷீலா அதை பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்படி நடிக்கிறார் என்று சுந்தரியும் ஷீலாவும் பார்த்து வியந்தார்கள். வருண் நடந்ததுகொள்வதை பார்த்து தருண் சந்தேகம்கொண்டார். சத்யாவிடம் சரியாக பேசுவது இல்லையே என்று நினைத்தார். அதை ஸ்ருதி இடம் கேட்டார். என்ன பிரச்சினை என்று. ஆனால் ஸ்ருதி தனக்கு எதுவும் தெரியாது என்றார். உடனே தான் இந்த பிரச்சனையை சரி செய்வதாக கூறி வருண் இடம் பேச சென்றார் ஸ்ருதி. ஸ்ருதி நல்லவள் போல் வருண் இடம் என்ன பிரச்சனை என்று விசாரித்தார். சத்யா மிகவும் வருத்தமாக இருக்கிறார் என்று கூறினார். ஆனால் வருண் அதை காதில் வனகவே இல்லை. உடனே அந்த இடத்தை விட்டு வெளியே கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.