Mouna Ragam 2 Today Episode | 16.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.16.02.2022

Mouna Ragam 2.16.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சுந்தரி இன்று வேலைக்கு வரவில்லை என்றதும், ஷீலா மற்றும் சத்யா இருவரும் சமைக்க ஆர்மபிதார்கள். தருணுக்கு தேங்காய் சட்னி பிடிக்காது, அதனால் அவனுக்கு மட்டும் புதினா சட்னி வைக்குமாறு கூறினார். சத்யாவும் அதை செய்வதாக கூறினார். உடனே ஸ்ருதி, தருணுக்கு சத்யா சமைக்க வேண்டாம் தானே சாமைப்பதாக கூறினார். ஷீலா உனக்கு சமைக்க தெரியுமா என்று கேட்டார். ஸ்ருதி வீம்புக்காக தெரியும் என்றார். பின் புதினா எடுத்து சமைக்க ஆரம்பிக்க சொன்னார் ஷீலா. ஸ்ருதிக்கு புதினா எது மல்லித்தலை எது என்றே தெரியவில்லை. அதனால் அவரை பார்த்து சத்யா மற்றும் ஷீலா கேலி செய்து சிரித்தார்கள். நீ சமைக்க வேண்டாம் விடு, சத்யாவே செய்யட்டும் என்று கூறினார் ஷீலா. கோவத்தில் ஸ்ருதி கொந்தளித்தார். அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போது சாப்பாடு அருமையாக உள்ளது என்று அனைவரும் பாராட்டினார்கள். சுந்தரியை இதே போல் சமைக்குமாறு கூறினார் மனோகர். ஆனால் இன்று சத்யா தான் சமைதார் என்று கூறினார் ஷீலா. உடனே அனைத்து புகழும் சத்யாவுக்கு கிடைத்தது. ஸ்ருதிக்கு அது எரிச்சலாக இருந்தது. பின் சத்யா ஸ்ருதி வருத்தப்பட கூடாது என்று நினைத்தார். அதனால் புதினா சட்னி மட்டும் ஸ்ருதி தன செய்தார் என்று கூறினார். உடனே ஸ்ருதி, தான் செய்யாததை செய்ததாக சொல்லி எனக்கு ஒன்றும் பெயர் வாங்கி தர வேண்டாம் என்று வெறுப்பாக பேசினார். வருண் பாட்டுப்பள்ளிக்காக கேட்டிருந்த வேலைகள் ஆரம்பம் ஆனது. அங்கு பள்ளி அமைக்க அரசு அனுமதி தந்துவிட்டதாக செய்து வந்தது. உடனே சத்யாவிடம் கூறி சந்தோஷப்பட்டார். சத்யாவை நாளைக்கே அங்கு அழைத்து சென்று, என்ன எல்லாம் வேண்டுமோ அதை எல்லாம் வாங்கி வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று கூறினார். பின் சத்யா தன் அம்மாவுக்கு உடனே அழைத்து இந்த சந்தோசமான விஷயத்தை கூறினார். மல்லிகா சத்யா ஒரு பள்ளி நடத்த போவதை நினைத்து பெருமைகொண்டார். ஸ்ருதி தன் மனதில் இருக்கும் வேதனையை தருணுக்கு புரியவைக்க நினைத்தார். ஆனால் ஸ்ருதி பேசுவதை காது கொடுத்து கேட்கவே இல்லை தருண். இதனால் ஸ்ருதி மனம் உடைந்து போனார். வீட்டில் அனைவரும் சத்யாவுக்கு பள்ளி ஆர்மபிப்பது பற்றி பேசி சந்தோசமாக இருந்தார்கள். ஆனால் ஸ்ருதி தனியாக அழுது புலம்பினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author