Mouna Ragam 2 Today Episode | 17.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.05.2022

Mouna Ragam 2. 17.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் சத்யா என்று பெயர் மாற்றி இருந்தது சக்தி என்றும் அவள் அப்பா கார்த்திக் கிருஷ்ணா என்றும் கூறினார். அதை கேட்டதும் காதம்பாரி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டார். ஆனால் அவர் எதற்காக இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒன்றும் புரியாமல் மனோகர் வருண் தருண் ஷீலா அனைவருமே குழப்பத்தில் இருந்தார்கள். பின் ஸ்ருதி காதம்பரியை தனியாக அழைத்து பேசினார். தனக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும் என்று கூறினார். இதை கேட்டதும் கோவத்தில் கொந்தளித்து பேசினார் காதம்பரி. இவளோ நாள் சக்தி என் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு என் மகள் வாழ்கையில் விளையாட வந்துவிட்டாள் என்று கத்தினார். கார்த்திக் தன்னை மருமடியும் ஏமாற்றிவிட்டார் என்று கத்தினார். பின் காதாம்பரி கார்த்திக்கை பார்க்க கோவமாக கிளம்பினார். அதற்கு பின் ஸ்ருதி தனக்கு சாதகமாக இந்த விஷயத்தை பயன்படுத்த நினைத்தார். உடனே மல்லிகா பற்றியும் சத்யா பற்றியும் தவறாக பேசினார். தன் வாழ்கையில் சத்யாவால் தான் பிரச்சனை என்றும் கூறினார். தானும் தன் அம்மாவும் அவர்களால் பெரிய பிரச்சனைகளை சமாலித்தோம் என்பது போல் கதை கட்டினார். அதை கேட்ட மனோகர் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author