Mouna Ragam 2 Today Episode | 18.01.2022 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை பார்த்து விடுவார்களோ என்று ஒரு பதட்டத்தில் இருந்தார். இவை அனைத்தையும் ஷீலா மற்றும் காதம்பரி இருவருமே கவனித்தார்கள். ஷ்ருதியை வேறு எங்கு தேடுவது என்று குழம்பினார்கள். கார்த்திக் வீட்டில் ஸ்ருதியை நினைத்து வருந்தினார். அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்ருதியை பற்றி தகவல் உள்ளது உடனே வருமாறு கூறினார். உடனே அந்த இடத்திற்கு கிளம்பினார் கார்த்திக். ஸ்ருதி அவரது தோழி வீட்டில் தான் தங்கி இருந்தார். அதை உடனே தெரிவித்தால் ஸ்ருதி இருக்கும் இடம் தெரிய வந்தது.கார்த்திக் ஸ்ருதியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்.பின் ஸ்ருதியும் மனம் மாறி வீட்டுக்கு திரும்பினார். கார்த்திக் ஸ்ருதி கிடைத்துவிட்டதாகவும் உடனே வீட்டுக்கு வரவும் காதம்பரிக்கு அழைத்து கூறினார். அவரும் தகவலை கேட்டதும் உடனே கிளம்பினார்கள்.ஆனால் சத்யா மீது இருந்த சந்தேகம் தீராததால் சத்யா அம்மாவை பார்க்கவேண்டும் என்று கூறினார். சத்யாவோ என்ன சொல்வது என தெரியாமல் தவித்தார். பின் காதம்பரி மற்றும் ருக்மணியை அழைத்து சென்றார். அடுத்து என்ன நடந்தது? அவர்கள் மால்லிகாவை பார்தார்களா? காணொளியை பார்க்க…

About Author