Mouna Ragam 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.04.2022

Mouna Ragam 2. 18.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன்னிடம் சரியாக பேசவில்லை என்று வருத்தமாக இருந்தார் சத்யா. வருண் இடம் பேச எவளவோ முயற்சி செய்தார். ஆனால் வருண் சத்யாவை கண்டுகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் வருணை சுற்றியே வந்தார் சத்யா. பின் பிருமை தாங்காமல் எதற்காக என்னிடம் pesuvdhu இல்லை என்று கேட்டார். வருண் அதற்கு முதலில் பதில் அளிக்கவில்லை. மீண்டும் சத்யா விடாமல் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வருண், திருமணத்திற்கு முன் நீயும் தருணும் காதலிதுவிட்டு, பின் எப்படி கூச்சமே இல்லாமல் என்னை திருமணம் செய்தாய் என்று கேட்டார். தம்பியை காதலித்துவிட்டு அண்ணனை திருமணம் செய்துகொள்ள உனக்கு எப்படி மனசு வந்தது என்று கேட்டார். ஆனால் சத்யா தான் காதலிக்கவில்லை என்று கூற முயற்சித்தார். வருண் அதை காதிலே வாங்காமல் அங்கு இருந்து கிளம்பினார். சத்யா இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் அழுவதை ஷீலா மற்றும் ஸ்ருதி பார்த்து ரசித்தார்கள். ஆனால் சத்யாவிடம் அவருக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார்கள். சத்யாவும் தன் கஷ்டங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். மாலை வருண் வீட்டுக்கு வரவே இல்லை என்று பதறினார் சத்யா. மனோகர் வருணுக்கு வேறு எதும் பிரச்சனையா என்று கேட்டார். ஆனால் ஷீலா அதெல்லாம் எதுவும் இல்லை என்று சமாளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author