Mouna Ragam 2 Today Episode | 19.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.05.2022

Mouna Ragam 2. 19.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா முகத்தை பார்த்து மல்லிகா எதோ பிரச்சனை என்று தெளிவாக தெரிந்துகொண்டார். ஆனால் சத்யா அதை மறைக்க முயற்சி செய்தார். மேலும் சத்யா மறைக்க முடியாமல் உண்மையை சொல்ல ஆரம்பித்தார். என்னவெல்லாம் நடந்தது என்று கூறினார். அனைத்தயும் கேட்டு வருத்தத்தில் இருந்தார் மல்லிகா. ஆனாலும் உனக்கு துணையாக நான் இருப்பேன் எப்போதும் என்று ஆறுதல் கூறினார். அதே நேரம் காதம்பரி மல்லிகா சக்தி இருவரும் மீண்டும் நம் வாழ்வில் வந்து விட்டார்களே என்று நினைத்து கொந்தளித்தார். கார்த்திக்கும் வீட்டுக்கு இன்னும் திரும்பவில்லை என்பதால் மல்லிகாவை தேடி தான் போய் இருப்பாரோ என்று நினைத்தார். அதனால் உடனே தாண்டிக்குடிக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பினார். அவருடன் ருக்மணியும் கூடவே சென்றார். மேலும் ஸ்ருதியை அழைக்க மனோகர் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் ஸ்ருதி தான் வரவில்லை என்று கூறினார், ஆனால் ஷீலா வருவதாக கிளம்பினார். அதே நேரம் வருண் தன் வாழ்வில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பிப்போய் இருந்தார். தருண் இடம் புலம்ப ஆரம்பித்தார். இவளோ நாள் எனது மனைவி பெயர் கூட தெரியாமல் ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து இருப்பதாக கூறினார். ஆனால் சத்யா தன் மீது வைத்து காதல், அன்பு , பாசம் அனைத்துமே உண்மை என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author