Mouna Ragam 2 Today Episode | 19.10.2021 | Vijaytv
mounaragam2.19.10.2021
மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரியிடம் தான் ஹைதராபாத்தில் இருப்பதாக பொய் சொன்னதை கேட்டு மல்லிகா கோவம் கொண்டார். எதற்கு இந்த ஊருக்கு வந்து இங்கு என்னுடன் தங்கி பின் எதற்காக நீங்கள் காதம்பிரியிடம் பொய் சொல்ல வேண்டும்? இது எல்லாம் தேவை இல்லாமல் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாக்கும் என்றார். அதற்கு கார்த்திக் என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது, நான் சாலை பிரச்சனை சரி ஆனதும் கிளம்பிவிடுவேன் என்று கூறினார். பின் சுகுமார் அவரை ஊர் சுற்றி காட்ட அழைத்துச் சென்றார். வருண் சத்யா தருண் மூவரும் கொடைக்கானல் கிளம்பினார். சத்யா எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் தவித்தாள். ஸ்ருதி தருண் திருமணத்தை ஷீலா நடத்தி வைப்பார் என ருக்மணி மகிழ்ச்சியுடன் ஸ்ருதியிடம் கூறினார். அவரும் அதை கேட்டதும் துள்ளி குதித்து மகிழ்ந்தார். பின் தருண் கொடைக்கானல் செல்வதால் தானும் செல்ல திட்டமிட்டனர் ஸ்ருதியும் ருக்மணியும்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…