Mouna Ragam 2 Today Episode | 19.10.2022 | Vijaytv
Mouna Ragam 2. 19.10.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி ஸ்ருதி செய்த காரியத்தை நினைத்து நினைத்து கோவத்தில் கொந்தளித்தார். அதை ஸ்ருதி இடம் கேட்கவேண்டும் அவரது அறைக்கு வந்தார். சக்தியை பார்த்ததும் மேலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதி. தனக்கு ஜுஸ் வேண்டும் மாத்திரை போட வேண்டும் என்று கூறினார். ஆனால் சக்தி அதற்கு இது யார் கொடுத்த மாத்திரை என்று கேட்டார். அது டாக்டர் கொடுத்தது தான் என்று கூறினார். இப்படியே சக்தி கேள்விகளை கேட்கவே ஸ்ருதி கோவத்தில் கத்தினார். என் குழந்தையை கொன்றதோடு இல்லாமல் என்னையும் நிம்மதி இல்லாமல் செய்கிறாய் என்று கூறினார். ஸ்ருதி இப்படி பேசியதும் தானாக முடியாமல் சக்தி தன் கோவத்தை கொட்டினார். இப்படி கர்பமாக இருக்கிறேன் என்று கூறி அனைவரையும் ஏமாற்றி உள்ளாய் என்று கத்தினார். என் அப்பா, பாட்டி, மாமா, தருண் என்று வீட்டில் அனைவரும் நம் வீட்டில் ஒரு குழந்தை வர போகிறது என்று அவளோ சந்தோசமாக இருந்தார்கள். இது அனைத்திலும் இப்படி ஒரு துரோகத்தை செய்ய எப்படி மனம் வந்தது என்று கேட்டார். இதனால் ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தார். எப்படி இவளுக்கு இந்த விஷயம் தெரியும் என்று யோசித்தார். சக்தியும் தான் அந்த டாக்டரை பார்த்து விசாரித்து விட்டேன் என்று கூறினார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உனக்கு மட்டும் இல்லை, என் அப்பாவுக்கும் கேட்ட பெயர் அதற்காக மட்டும்தான் வெளியே சொல்லாமல் இருக்கிறேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.