Mouna Ragam 2 Today Episode | 20.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.05.2022

Mouna Ragam 2. 20.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டுக்கு கார்த்திக் வந்தார். அது வரை அமைதியாக இருந்த மனோகர் கார்த்திக்கை பார்த்த உடன் கோவத்தில் கொந்தலித்தார். வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்தார். பாட்டு பாட வேலைக்கு சேர்க்க சொந்த மகளையே ஆள் மாறாட்டம் போல் செய்து என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க எப்படி மனசு வந்தது? இது எவளோ பெரிய குற்றம் தெரியுமா என்று கேட்டார் மனோகர். கார்த்திக் அவர் பக்க நியாயத்தை சொல்ல முயற்சித்தார். ஆனால் அதை மனோகர் கேட்கும் நிலையில் இல்லை. அவரை பேசவும் விடவில்லை. ஊரில் இவளோ பெரிய ஆள் என்று பெயர் எடுத்து திருட்டுத்தனமாக ஒரு குடும்பம் வைத்து இருப்பது எவளோ பெரிய அசிங்கம் என்று கேட்டார். கார்த்திக் உண்மையை கூற மீண்டும் ஆரம்பித்தார், ஆனால் ஸ்ருதி அவரை தடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். நடப்பதை பார்த்து வருண் மற்றும் தருண் இருவருமே என்ன செய்வது என்று புரியாமல் நின்றார்கள். அதே நேரம் காதம்பரி தாண்டிக்குடிக்கு வந்து சேர்ந்தார். அப்போது சத்யா மற்றும் மல்லிகா இருவரும் கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். அந்த வழியில் சென்ற காதம்பரி கோவத்தில் மல்லிகா அருகில் சென்று முறைத்தார். மல்லிகாவின் கழுத்தை நெரித்து மீண்டும் என் வாழ்கையில் எதற்காக வந்தாய் என்று கோவத்தில் கத்தினார் காதம்பரி. இவளோ நாளாக என்னை ஏமாற்றி கார்த்திக் உடன் குடும்பம் நடத்தி வந்து மீண்டும் உன் பொண்ணை சமயம் பார்த்து ஊருக்கு அனுப்பி வைத்தாயா என்று கேட்டார். சத்யா அவரை தடுத்தார். ஆனால் காதம்பரி சத்யாவை தள்ளிவிட்டு மேலும் கழுத்தை நெருக்கினார். இதனால் கோவதில் சத்யா அருகில் இருந்த அருவாளை எடுத்து காதம்பரி கழுத்தில் வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author