Mouna Ragam 2 Today Episode | 21.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.21.02.2022

Mouna Ragam 2.21.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் தருண் இருவரும் கார்த்திக்கை பார்த்து அவர்களது பாட்டு பள்ளியை திறந்து வைக்க வேண்டும் என்று கேட்க வந்தார்கள். தருண் வருண் இருவரையும் பார்த்ததும் காதம்பரி மற்றும் ருக்மணி இருவரும் அவர்களை வரவேற்றார்கள். பின் கார்த்திக்கை அழைத்து பேசினார்கள். புதிதாக பாட்டு பள்ளி திறக்க போவதாகவும், அதை சத்யாவுக்கு வருண் செய்வதாக கூறினார்கள். அதை கேட்டதும் கார்த்திக் மிகவும் சந்தோசம் கொண்டார். ஆனால் காதம்பரி மற்றும் ருக்மணி இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கார்த்திக் தான் இந்த பள்ளியை திறந்து வைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதை கேட்டதும் கா வேண்டாம் என்று சைகை செய்கிறார். ஆனால் கார்த்திக் தான் கண்டிப்பாக செய்வதாக கூறினார். உடனே காதம்பரிக்கு எரிச்சலாக இருந்தது. ஸ்ருதிக்கு பிடித்த சமையலை சமைத்து கொடுக்க வேண்டும் என்று சத்யா அவருக்கு சின்ன வயதில் பிடித்த புலாவ் செய்தார். ஆனால் ஸ்ருதி தனக்கு அதெல்லாம் பிடிக்காது என்று கூறினார். என் அப்பா விடம் உனக்கு என்ன பேச்சு!? எதற்கு பொய் சொல்லி அவரை பார்க்க சென்றாய் என்று கேட்டார். அதற்கு, அவர் தான் என் குரு, அவர் தான் எனக்கு வேலை கொடுத்தார். அவரால் தான் எனக்கு இந்த வாழ்க்கையே, அதனால் இந்த பள்ளி திறக்கும் விஷயத்தை சொல்லி ஆசிர்வாதம் வாங்கினேன் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author