Mouna Ragam 2 Today Episode | 21.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.04.2022

Mouna Ragam 2. 21.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வீட்டை விட்டு கிளம்பி எங்கு செல்வது என்று தெரியாமல் நடந்தார் . அதே நேரம் விஷயம் கேள்வி பட்ட மனோகர் மற்றும் தருண் இருவரும் வீட்டுக்கு வேகமாக வந்தார்கள். ஷீலாவை என்ன நடந்தது என்று விசாரித்தார் மனோகர். ஆனால் ஷீலா தனக்கு எதுவும் தெரியாது. நான் இவளவோ தடவை கெட்டும் சத்யா எதையுமே சொல்லவில்லை. தான் கெஞ்சி கூத்தாடி பார்த்தும் சத்யா அதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டாள் என்று கூறினார். ஆனால் மனோகர் என்ன நடந்தாலும் நீ அவளை ஒக விட்டு இருக்க கூடாது என்று கூறினார். மேலும் வீட்டில் பிரச்சனை நடக்கும்போது எனக்கு அழைத்து எதற்கு சொல்லவில்லை என்றும் கடிந்து கொண்டார். பின் வருணை அழைத்தார். என்ன பிரச்சனை என்று விசாரிக்க நினைத்தார். ஆனால் ஷீலா அதை செய்ய விடாமல் தடுத்தார். பின் உடனே சத்யாவை தேடி கிளம்பினார். எப்படியும் ஊருக்கு போக நினைத்து இந்த வழியாக தான் சென்று இருப்பாள் என்று மனோகர் தேடி அலைந்தார். சத்யாவை பார்த்து பேசவும் செய்தார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தான் சரி செய்வதாக கூறினார். அப்படி என்னால் சரி செய்ய முடியவில்லை என்றால் பின் நீ உன் விருப்பம் படி செய் என்றார். ஆனால் அதற்கு சத்யா என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author