Mouna Ragam 2 Today Episode | 21.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.10.2022

Mouna Ragam 2. 21.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் ஸ்ருதி மேல் உச்சக்கட்ட கோவத்தில் இருந்தார். தன் வீட்டுக்கு ஒரு வாரிசு வரப்போவதை நினைத்து இந்த வீட்டில் அனைவரும் சந்தோசத்தில் இருந்த போது கூட உனக்கு உறுத்தவில்லையா என்று கேட்டார். உன்னை திருமணம் செய்தது தான் நான் செய்த ஒரே தவறு என்று கூறினார். நீயும் இதை எல்லாம் என் மேல் உள்ள காதலில் தான் செய்கிறாய் என்று ஒவ்வொரு விஷயத்திலும் நான் பொறுமையாக உனக்கு உறுதுணையாக இருந்தேன். ஆனால் என்னை நீ வெறும் இளிச்ச வாயாக பார்த்து இருக்கிறாய் என்று கூறினார். ஸ்ருதி என்ன தான் பேச அமுயற்சி செய்தாலும் அதை கேட்கும் நிலையில் தருண் இல்லை. அவர் கதிவிட்டு கிளம்பினார். அதே நேரம் வருண் இடம் சக்தி கோவம் கொண்டார். எதற்காக இந்த விஷயத்தை வெளியே சொன்னீர்கள் என்று கேட்டார். வருண் அதற்கு உன் மேல் வீண் பழி சொல்லி உன்னை குற்றவாளி போல் பேசினால் என்னால் பேசாமல் இருக்க முடியாது என்றார். மேலும் இனியாவது ஸ்ருதிக்கு பரிந்து பேசுவதை நிறுத்து என்றார். ஸ்ருதிக்கு ஆறுதல் சொல்ல செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால் அதையும் கேட்காமல் சக்தி ஸ்ருதியிடம் பேசினார். அப்போது வருண் சொன்னது போல் சக்தியை திட்டுவது, திமிராக பேசுவது, உன்னையும் நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என்று மிரட்டினார். இதை மீண்டும் பார்த்த வருண் அவரை வெளுத்து வாங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author