Mouna Ragam 2 Today Episode | 21.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 21.11.2022
மெளன ராகம் 2 தொடரில் இன்று, விஸ்வநாதன் ஸ்ருதியை மனோகர் வீட்டில் விட வந்து இருந்தார். அவரை பார்த்த மனோகர் மற்றும் தருண் இருவரும் கோவத்தில் கொந்தளித்தார்கள். விஸ்வநாதன் மனோகர் இடமும் தருண் இடமும் பேச முயற்சித்தார். ஆனால் அவரை பேச விடமால், எரிந்து விழுந்தார் தருண். மீண்டும் ஸ்ருதி எதோ தெரியாமல் ஒரு தவறு செய்ததற்கு வாழவே முடியாது என்று கூறுவது தவறு என்று கூறினார். ஆனால் தருண், இது ஒன்றும் தெரியாமல் செய்யும் தவறும் இல்லை, அந்த அளவுக்கு இவள் சின்ன குழந்தையும் இல்லை என்றார். அவளுக்கு இங்கு இருக்க விருப்பம் இல்லை என்றால் வீட்டை விட்டு தாராளமாக போகலாம் என்று கூறினார். அதை கேட்ட விஸ்வநாதன் கோவத்தில் எனக்கு ஸ்ருதியின் சந்தோசம் தான் முக்கியம், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது போல் பேசினார். இதை கேட்டு மேலும் கோவம் தான் கொண்டார் தருண். பின் ஸ்ருதி தன் தாத்தா இப்படி பேசுவர் என்று எனக்கு தெரியாது எண்ணி மன்னித்து விடுங்கள் என்று கூறினார். அந்த மன்னிப்பையும் யாரும் ஏற்றுக்கொள்ள நினைக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…