Mouna Ragam 2 Today Episode | 22.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.22.02.2022

Mouna Ragam 2.22.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவுக்கு பாட்டு பள்ளி திறக்க கார்த்திக்கை வருண் மற்றும் தருண் இருவரும் அழைத்தார்கள். அவரும் வருவதாக கூறினார். உடனே ஸ்ருதியை அழைத்து பேசவேண்டும் என்று வெளியே சந்தித்தார்கள். பொது வருண் தருண் இருவரும் வீட்டுக்கு வந்த விஷயத்தை கூறினார் காதம்பரி. சத்யாவுக்கு ஆரம்பிக்கப்படும் பள்ளிக்கு கார்த்திக்கை அழைத்தார்கள். அதற்கு உன் அப்பாவும் வருவேன் என்று கூறிவிட்டார் என்று கூறினார். உடனே ஸ்ருதிக்கு தாங்க முடியாத கோவம். தனக்கு கிடைக்காத மரியாதை சத்யாவுக்கு கிடைக்கிறது. என் சொந்த அப்பவே அவளை தான் முக்கியமாக கவனிக்கிறார் என்று கோவம் கொண்டார். உடனே தன் அப்பாவிடம் இதை கேட்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் ஸ்ருதி கத்தி தீர்த்தார். என் திருமணத்திற்கு உங்களை வர கூடாது என்று கூறினார்கள், இப்போது சத்யா பள்ளி திறப்பு விழா நடத்த மட்டும் எதற்கு உங்களை அழைக்க வேண்டும். நீங்களும் வருவேன் என்று ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கத்திவிட்டு உடனே கிளம்பிவிட்டார். கார்த்திக் என்ன சொல்ல வருகிறார் என்று ஸ்ருதியும் கேட்கவில்லை, காதம்பரியும் கேட்கவில்லை. தருண் இடம் பேச ஸ்ருதி முயற்சிக்கிறார். ஆனால் அவர் கண்டுகொள்ளாமல் செல்ல, எரிச்சலுடன் இருந்தார் ஸ்ருதி. அதே நேரம் வருண் சத்யா இருவரும் கொஞ்சி விளையாடியதை பார்த்து மீண்டும் கோவம் கொண்டார்.மனோகர் வீட்டில் அனைவரும் ஒன்னாக அமர்ந்து சாப்பிடும் போது அனைவரும் சேர்ந்து ஊர் சுற்றலாம் என்று பேசிக்கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author