Mouna Ragam 2 Today Episode | 22.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 22.04.2022

Mouna Ragam 2. 22.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா மனோகர் கெஞ்சியும் வீட்டுக்கு திரும்பவில்லை. ஷீலா மீண்டும் சத்யா வந்து விடுவாளோ என்று பயந்தார். ஆனால் ஸ்ருதி அப்படியெல்லாம் நடக்காது என்று நம்பிக்கையாக இருந்தார். மனோகர் மட்டும் திரும்புவதை பார்த்த ஷீலாவுக்கு அப்போது நிம்மதியாக இருந்தது. ஆனால் சத்யா நீங்கள் கூப்பிட்டும் வரவில்லையா என்று வருத்தமாக பேசுவது போல் நடித்தார். மனோகர் வருண் இடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். ஆனால் வருண் எந்த பதிலும் சொல்லவில்லை. சத்யாவை வீட்டுக்கு மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூட கூறவில்லை. மனோகர் மீண்டும் மீண்டும் கேட்டார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின் தருண் இடமாவது உன் பிரச்சனையை கூறுமாறு கேட்டார். ஆனால் வருண் வாயை திறக்கவில்லை. ஸ்ருதிக்கு லேசாக பயம் வந்தது. வருண் உண்மையை சொன்னால் தருண் தன்னையும் வீட்டை விட்டு அனுப்பி விடுவார் என்று நினைத்தார். ஆனால் ஷீலா அதெல்லாம் எதுவும் தெரிய வாய்ப்பு இல்லை என்று ஆறுதல் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author