Mouna Ragam 2 Today Episode | 22.07.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தன் முடிவை நடத்தி காட்ட டாக்டர் இடம் உடனே கார்த்திக்கை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். டாக்டர் இங்கு அருகில் இருக்கும் இடத்தில் இருப்பதே நல்லது. இப்போது வண்டியில் இவளோ தூரம் செல்வது நல்லது இல்லை என்று கூறினார். மேலும் அவருக்கு பிரச்சனை எதுவும் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். ஆனால் அதையும் மீறி காதம்பரி சென்னைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தார். என்ன நடந்தாலும் கார்த்திக் இந்த ஊரில் இருக்க கூடாது என்று நினைத்தார். பின் சக்திக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அதனால் அவரும் அப்பாவை எங்கும் நைப்ப போவது இல்லை என்று கூறினார். மேலும் கார்த்திக் தனக்கு இங்கு தாண்டிக்குடியில் மல்லிகா மற்றும் சக்தியுடன் இருக்கவே தனக்கு விருப்பம் என்று கூறினார். இதனால் கோவம் அடைந்த ஸ்ருதி தருண் இடம் தனக்கு சாதகமாக பேசினார். சக்தி என் அப்பாவை நிரந்தரமாக பிரிக்க முடிவு செய்து விட்டதாக கூறினார். அதையும் தருண் நம்பினார். மேலும் மல்லிகா இந்த பிரச்சனை எல்லாம் எதுவும் வேண்டாம், அவர் காதம்பரியுடன் இருக்கட்டும் என்றார். ஆனால் பழனி, சக்தி, வருண் என்று அனைவரும் அவரை நம்மோடு வைத்துக்கொள்வது தன நல்லது என்று கூறினார்கள். அதனால் மல்லிகாவும் சம்மதித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author