Mouna Ragam 2 Today Episode | 24.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 24.03.2022

Mouna Ragam 2. 24.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு ஆரம்பமானது. ஆனால் சத்யா வருண் இருவரும் வராததால் கார்த்திக் தேடினார். இதை ஸ்ருதி பார்த்துவிட்டார். பின் விளக்கை எடுத்து உள்ளே வைக்க சொன்னார் மனோகர். பின் வருண் சத்யா இருவரும் நலங்கு வைத்தார்கள். பின் சடங்கு அத்தனையும் முடிந்ததும் அனைவரும் சாப்பிட்டார்கள். மனோகர் கார்த்திக் அருகில் அமரும்படி செய்தார் சத்யா. அதை கவனித்த காதம்பரி, ஷீலா, ஸ்ருதி, ருக்மணி அனைவரும் எரிச்சல் அடைந்தார்கள். வருண் சத்யா இருவரும் எப்படியாவது மனோகர் கார்த்திக் இருவரையும் பேச வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஷீலா இந்த வீட்டில் நான் செய்ய வேண்டிய அனைத்தையும் ஸ்ருதி செய்து முடித்து விடுவதாக பெருமையாக பேசினார். இதை கேட்டு காதம்பரி மற்றும் ருக்மணி சந்தோசத்தில் இருந்தார்கள். சத்யா கார்த்திக் இடம் பேச ஆரம்பித்தார். மல்லிகா வர போவதாகவும் கூறினார். இதை தூரத்தில் இருந்து ஸ்ருதி கோவமாக பார்க்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author