Mouna Ragam 2 Today Episode | 25.02.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.02.2022

Mouna Ragam 2. 25.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா தருண் ஸ்ருதி சாப்பிட சென்ற இடத்தில் சாப்பிட்டு முடித்தார்கள். அங்கு சத்யா அனைத்தையும் சுத்தி பார்த்தார். அப்போது ஸ்ருதி அவரிடம் பேச்சு கொடுத்தார். இங்கு இருக்கும் என் அப்பா அம்மாவையே நான் அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால் நீ அதெல்லாம் யோசிக்க மாட்டாயா என்று கேட்டார். சத்யா அதற்கு, தானும் அம்மாவை தன் ஊரை எல்லாம் நினைத்து பார்ப்பேன் ஆனால் வேறு வழி இல்லை என்றார். பின் உனக்கு பெரியப்பா பெரியம்மா யாரும் இல்லையா? மாமா இல்லையா? அண்ணன் தங்கை இல்லையா? இது வரை சென்னை நீ வந்தது இல்லையா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் ஸ்ருதி. சத்யா திணறினார் பதில் சொல்ல முடியாமல். இதெல்லாம் எதற்கு இப்போ கேட்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு, உன்னை பற்றி எதுவுமே எனக்கு தெரியாது அதனால் தான் என்றார். பின் எதையோ பேசி சமாளித்தார் சத்யா. வீட்டுக்கு வந்ததும் ஹோட்டலில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் ஸ்ருதி பார்த்து ரசித்தார். அதை தருண் இடம் காட்டினார். ஆனால் அவர் அதை திரும்பி கூட பார்க்கவில்லை. ஸ்ருதி பேச்சையும் கேட்கவில்லை. வெறுப்பாக பேசினார். ஸ்ருதியும் ஹோட்டலுக்கு நீங்கள் தானே அழைத்து சென்றீர்கள் என்று கேட்டார். அதற்கு, வருண் ஸ்ருதியை அழைத்து வர முடியுமா என்று கேட்டதால் வேறு வழி இல்லாமல் உன்னை அழைத்து சென்றேன் என்றார். என்னிடம் பேச முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறினார். இதனால் வேதனையில் இருந்தார் ஸ்ருதி. அடுத்த நாள் சத்யாவின் ஸ்கூல் திறக்கும் விழாவுக்கு யாரை அழைக்க வேண்டும் என்று யாரை பார்க்க வேண்டும் என்று பேசினார்கள் குடும்பத்தில். அப்போது மனோகர், சத்யாவின் அம்மாவை கிளம்ப சொல்லியாச்சா என்று கேட்டார். உடனே சத்யா பதட்டம் ஆகினார். இதை கவனித்த ஸ்ருதி, தன் குடும்பத்தை பற்றி விசாரித்தாள் மட்டும் எதற்கு பதட்டம் ஆகிறாள் என்று சந்தேகம்கொண்டார். பின் சத்யாவும் அம்மாவால் வர் முடியாது, அவருக்கு உடம்பு சரி இல்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் அம்மாவால் வர முடியவில்லை என்று அவருக்கு அழைத்து பேசி வருத்தப்பட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author