Mouna Ragam 2 Today Episode | 25.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 25.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடந்தது முடிந்தது. கார்த்திக் மற்றும் சத்யா பேசுவதை பார்த்து எரிச்சல் அடைந்தார் ஸ்ருதி. பின் கார்த்திக் சத்யாவிடம் மறைமுகமாக பேசினார். பின் கார்த்திக் வீட்டில் அனைவரும் கிளம்பினார்கள். அன்று இரவு தருண் ஸ்ருதி இருவரும் வெளியூர் கிளம்பினார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் சத்யா எடுத்து கொடுத்தார். அடுத்த ரெண்டாவது நாளில் சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு நடத்த எல்லாரும் தயார் ஆனார்கள். வருண் வாசலை பார்த்த வண்ணம் இருந்தார். மல்லிகா மற்றும் ஊரில் இருந்து அனைவரும் வரும் நேரம் ஆனது என்று காத்திருந்தார். சத்யா அவர்கள் அனைவருக்கும் சமையல் செய்தார். மல்லிகா மற்றும் ஊர் காரர்கள் வந்ததும் ஷீலவின் முகமே மாறி விட்டது. எரிச்சலாக பார்த்தார். அவர்கள் கொண்டு வந்த பொருட்களை அருவெறுப்பாக பார்த்தார். ஆனால் மனோகர், சத்யா மற்றும் வருண் அனைவரும் சந்தோசமாக வரவேற்றார்கள். பின் அவர்களுக்கான அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மல்லிகா ஸ்ருதி இருப்பாரோ என்று தயங்கினார். ஆனால் சத்யா அவர்கள் வெளியூர் சென்றுவிட்டதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.