Mouna Ragam 2 Today Episode | 25.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.04.2022

Mouna Ragam 2. 25.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஷீலாவிடம் தனக்கு பயமாக இருக்கிறது என்று ஸ்ருதி வருந்தினார். வருண் நான்தான் அந்த விஷயத்தை சொன்னேன் என்று மனோகரிடம் கூறினால் அடுத்து தருண் என்னை இந்த வீட்டை விட்டே அனுப்பி விடுவார் என்று கூறினார். ஆனால் ஷீலா அதெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை என்று உறுதியாக கூறினார். பின் வருண் சோகமாக இருந்தார். தன் வாழ்கையில் எல்லா நேரமும் என்னோடு இருப்பேன் என்று கூறி சத்யா ஏமாற்றிவிட்டாள் என்று நினைத்தார். அப்போது வருணுக்கு ஆறுதல் சொல்வது போல் ஸ்ருதி அவரிடம் பேசினார். அவருக்கு ஆறுதல் சொல்லும் நேரம் தருண் தூரமாக பார்க்கிறார். ஸ்ருதி மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகிறது. கார்த்திக் தன் மேல் தான் அனைத்து தவறும் என்று நினைத்து வருந்தினார். ஆனால் சத்யா இங்கு இருக்கிறார் என்று தெரியாமல் தவித்தார். மல்லிகாவுக்கு அழைத்து விசாரித்தார். சாய்ந்தரம் இங்கு வருவதாக கூறியதாக மல்லிகா பாதியில் வைக்க கார்த்திக் அங்கு தான் சென்று இருப்பாள் என்று முடிவு செய்து கொண்டார். ஆனால் சத்யா போக இடம் இல்லாமல் வீதியில் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். அந்த வழியாக சென்ற ரவுடிகள் இருவர் சத்யாவை வம்பு இழுக்க ஆர்ம்பித்தார்கள். அந்த நேரம் போலீஸ் வண்டி அந்த வலியாக வந்தது. அதை பார்த்ததும் அந்த ரவுடிகள் ஓடிவிட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author