Mouna Ragam 2 Today Episode | 27.01.2022 | Vijaytv
Mouna Ragam 2.27.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டும் தருணம் மனோகர் அங்கு வந்து திருமணத்தை நிறுத்தினார். ஸ்ருதி ஏற்கனவே திருமணத்திற்கு தயார் ஆகும்போது, சத்யாவை வெருப்பேற்ற நினைத்து அவருக்கு அழைத்து பேசி இருக்கிறார். தன் திருமணம் இன்னும் ஒரு மணி நேரத்தில் நடக்க போவதாகவும், மனோகருடைய மருகளாக நான் வீட்டு வாசலில் வந்து நிற்பேன் என்று சவால் விட்டார். அதனால் சத்யா ச்ந்தேகம் கொண்டு கார்த்திக்கை அழைத்து விஷயத்தை கூறினார். பின் வீட்டில் மனோகர், வருண் இடமும் விஷயத்தை கூறினார். உடனே கோவிலுக்கு கிளம்பினார்கள். அங்கு சென்ற மனோகர் கோவத்தில் கத்தினார். கார்த்திக் தான் இந்த ஏற்பாடு செய்து இருப்பார் என்று எண்ணி அவர் மீது கோபம் கொண்டார். ஆனால் கார்த்திக் தனக்கும் விஷயம் தெரியாது என்றார். இவளவு நடந்தும் ருக்மணி ஸ்ருதி கழுத்தில் தாலி கட்டும்படி தரு மிரட்டினார். ஆனால் மனோகர் தாலியை பிடிங்கி எரிந்து தருணை அழைத்து சென்றார். வீட்டில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஷீலா தூங்கி எழுந்து வந்தார். அப்போது மனோகர் நடந்தது அனைத்தையும் கூற , ஒன்றும் தெரியாதது போல் நடித்தார் ஷீலா. ஸ்ருதிக்கு கார்த்திக் என்ன என்னவோ சமாதானம் செய்து பார்த்தார். ஆனால் அவர் தான் செய்த காரியம் சரி என்றே கடைசி வரை புடிவாதமாக இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…