Mouna Ragam 2 Today Episode | 29.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 29.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா பாட்டை கேட்டு ரொம்ப நாள் ஆனதால் அவரை பாடும்படி அவரது மாமா கேட்டார். சத்யாவும் முதலில் தயங்கி பின் பாட ஆரம்பித்தார். சத்யாவின் பாட்டில் அனைவரும் மெய் சிலிர்த்து போய் நின்றார்கள். பின் அனைவரும் வருண் பாட்டு பாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் வருண் எனக்கு பாட்டு வராது என்று கூறினார். ஆனால் விடாமல் கேட்டதால் பாடினார். ஆனால் அதை கேட்டு வீடே சிரித்தது. பின் சத்யா அவர் அம்மாவை இங்கேயே தங்கும்படி கூறினார். மல்லிகா அதெல்லாம் இருக்க முடியாது என்றார். அப்போ நான் வேறு ஒரு வீடு வாங்கி தரேன் என்று சத்யா சொல்ல, அப்போது தாங்குவேன் என்று கூறினார் மல்லிகா. அப்போது சத்யா ஒரு பேரன் அல்லது பேத்தியை பெத்து கொடுத்தால் மல்லிகா இங்கேயே தங்கி பார்த்து தானே ஆக வேண்டும் என்று பேசி கிண்டல் செய்தார்கள். உடனே சத்யா வெக்கபட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் குழந்தை பெற்று கொள்ளலாம் என்று அவரும் ஆசை பட்டார். உடனே வருண் இடம் இதை பற்றி பேச வந்தார். அவரை கட்டி அணைத்துக்கொண்டார். தான் இன்று ரொம்ப சந்தஷமாக இருப்பதாக கூறினார். இருவரும் பேசி விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பொது தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களை பார்த்த சத்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.