Mouna Ragam 2 Today Episode | 29.06.2022 | Vijaytv
Mouna Ragam 2. 29.06.2022
மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட முடியாமல் போனதால் தருண் அவரை அழைத்து செல்ல முயற்சி செய்தார். வருண் வேறு வழி இல்லாமல் கிளம்பினார். ஆனால் அவருக்கு போக மனம் இல்லை. ஊரை விட்டு கிளம்பிய சற்று நேரத்தில் திரும்பி ஊருக்குள்ளே சென்றார் வருண். ஒன்றும் புரியாமல் பின்னாடி வந்தார்கள் தருண் மற்றும் ஸ்ருதி. மீண்டும் வருண் சத்யா வீட்டு வாசலில் நின்று தனக்கு இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டார். ஆனால் பழனி அவரை மதிக்கவே இல்லை. இந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறு கூறினார். சத்யா மனதில் என்ன இருக்கிறது என்று புரியாமல் மல்லிகாவும் குழம்பினார். ஆனால் பழனி சத்யா சின்ன வயது பெண், அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி சமாதானம் செய்தார். ஆனால் சத்யா உடனே குறுக்கு பாதையில் வந்து வருண் காரை நிறுத்தினார். வருண் ஊருக்கு போவதை சக்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னை விட்டு போகாதே என்ப்பது போலவே சக்தியின் கண்கள் சொன்னது. இதை பார்த்த வருண் மீண்டும் மனம் மாறினார். ஊருக்கு போக மாட்டேன் என்று முடிவு எடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…