Mouna Ragam 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.11.2022

Mouna Ragam 2. 29.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் அவர்களது தேனிலவு முடிந்து வீட்டுக்கு மகிழ்ச்சியாக திரும்பினார்கள். அது வரை ஸ்ருதி பேசுவதை கூட கண்டுகொள்ளாமல் இருந்த மனோகர் மற்றும் தருண் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனைவரும் சேர்ந்து சாப்பிட தயார் ஆனார்கள். ஸ்ருதி மட்டுமே தான் இந்த வீட்டில் ஒரு ஆளாக கூட யாரும் பார்க்கவில்லை, ஆனால் இந்த வருண் சக்தி இருவர் மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என்று எரிச்சல் அடைந்தார். பின் மனோகர் வருண் சக்தி இருவரையும் பாட்டு பாட சொன்னார். அவர்களும் பாடினார்கள். அதை கேட்ட தருண் உடனே ஒரு யோசனை சொன்னார். நம் நடத்தும் பாட்டு பள்ளியை இனி சக்தியே நிர்வாகம் செய்யட்டும் என்று கூறினார். அதற்கு இப்போ என்ன அவசியம் என்று கேட்டதற்கு, தருண் அவர் இத்தனை நாள் மறைத்து வைத்து இருந்த உண்மையை கூறினார். சக்திக்காக திறந்த இந்த பள்ளி திறப்பு விழா அன்று என்னை மிரட்டி என் பெயருக்கு மாற்ற வேண்டும் என்று என்னை பேச வைத்தது ஸ்ருதிதான் என்று கூறினார். அப்படி செய்யவில்லை என்றால் நான் சக்தியை காதலிக்கிறேன் என்று ஊருக்கே தெரியும்படி செய்வேன் என்று கூறியதாக தருண் கூறினார். இதை கேட்டதும் வீட்டில் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author