Mouna Ragam 2 Today Episode | 30.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.03.2022

Mouna Ragam 2. 30.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி திடீர் என்று வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்த சத்யா அதிர்ச்சியில் நின்றார். என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றார். ஆனால் ஸ்ருதி சத்யாவை நக்கலாக பார்ப்பதும் பேசுவதுமக இருந்தார். உடனே உன் அம்மா மாமா அனைவரையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். சத்யா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தார். பின் அம்மா இந்நேரம் மாத்திரை போட்டு தூங்கி இருப்பர் என்று சொல்லி சமாளிக்க ஆரம்பித்தார். பின் ஸ்ருதியும் இப்போ தூங்கி எழுந்து காலையில் அம்மாவை பார்கிறேன் என்று அவரே அறைக்கு கிளம்பினார். இரவு முழுவதும் சத்யா தூக்கம் இல்லாமல் தவித்தார். அம்மாவை இரவோடு இரவாக ஊருக்கு அனுப்பலாமா என்று யோசித்தார். ஆனால் அது நடக்காத காரியம் என்று யோசித்தார். சத்யா தூங்காமல் இருப்பதை பார்த்த வருண் விசாரித்தார். ஆனால் சத்யா எதெதோ பதில் சொல்லி சமாளித்தார் சத்யா. அடுத்த நாள் அனைவரும் காபி குடித்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது மீண்டும் ஸ்ருதி மல்லிகா பேச்சை ஆரம்பித்தார். மல்லிகா சுருதி இருப்பது தெரியாமல் மாடியில் இருந்து கீழே வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author