Mouna Ragam 2 Today Episode | 30.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.05.2022

Mouna Ragam 2. 30.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தியை நினைத்து பார்த்துகொண்டு இருந்தார். அதே நேரம் சக்தியும் அவரது வீட்டில் வருண் பற்றிய யோசனையில் இருந்தார். அடுத்த நாள் காலையில் வருண் சக்தி மாமாவிடம் சக்திக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார். பின் சக்தி எதற்கு பாதியிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்தினாள் என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல போய் சக்தியின் மொத்த கதையையும் கூறினார் பழனி. மல்லிகாவுக்கும் கார்த்திக் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நடந்தது. பின் கார்த்திக் கிருஷ்ணா வேறு ஒரு திருமணம் செய்து கொண்டது. பின் தன் அம்மா இறந்து விட்டதாக நினைத்து சென்னைக்கு சக்தி சென்றது. அங்கு இருந்த காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதி செய்த கொடுமைகள் என்று அத்தனையும் கூறினார். சக்தி தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அங்கு இருப்பவர்கள் சத்யாவின் வாழ்க்கையில் நடந்ததை பற்றி பேசினார்கள். மேலும் காசுக்கு ஆசைப்பட்டு இப்படி வாழ்க்கையை துளைத்துவிட்டாளே என்று கூறினார்கள். அதை கேட்ட மல்லிகா கோவத்தில் கொந்தளித்து ன்கு இருந்த அனைவரையும் திட்டி தீர்த்தார். கார்த்திக் வருண் சக்தி இருவரையும் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்று கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் மனோகர் வீட்டுக்கு. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author